பாஜகவின் சட்டவிரோத ஆட்சி நடைபெறும் மத்தியப்பிரதேச மாநிலத்தின் மொரேனாவிற்கு அருகே உள்ள சிறிய கிராமத்தில் தலித் மக்கள் (பார்மர்) நவம்பர் 25 அன்று சமைப்பதற்கு தேவைப்படும் விறகிற்காக பேரீச்ச மரத்தின் கிளைகளை வெட்டியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மஹோர் சமூகத்தைச் சேர்ந்த சாதிவெறிக் குண்ட ர்கள் தலித் மக்கள் மீது கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டனர். குறிப்பாக தலித் மக்கள் விறகு வெட்ட கொண்டு வந்திருந்த கோடரியை பிடுங்கி அவர்கள் மீதே தாக்கு தல் நடத்தியுள்ளனர். இந்த கொடூரத் தாக்குதலில் பெண்கள் உட்பட 6 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், அவர்கள் அனைவரும் மொரேனா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்க ப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர் ர்பாக சிவில் லைன்ஸ் காவல் நிலையம் வழக்குப் பதிவு செய்துள்ளது. ஆனால் யாரையும் கைது செய்யவில்லை.